கர்த்தரே, காப்பாற்றும், ஆசீர்வாதம் தாரும்
ஞானப்பாடல் : 11
1. கர்த்தரே காப்பாற்றும்
ஆசீர்வாதம் தாரும்
எங்கள் மேல் உம்முகத்தை
வைத்து, வீசும் ஒளியை.
2. எங்களுக்கன்றன்று
சமாதானம் தந்து
கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும்
உமதாவியைப் கொடும்.
3. எங்கள் மீட்பரான
இயேசுவின் மேலான
நாமத்துக்கு மகிமை
ஆமேன், கேட்பீர் ஜெபத்தை.
No comments:
Post a Comment