Sunday, June 28, 2020

உம்மை துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே- ஞானப்பாடல் : 2

1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே,
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி, ராஜாதி ராஜாவே,
உமது மா, மகிமைக்காக, கர்த்தா,
தோத்திரஞ் சொல்லுகிறோமே.

2. கிறிஸ்தே, இரங்கும் குமாரனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தேவாட்டுக்குட்டி,
எங்கள் மனு- கேளும்; பிதாவினது
ஆசனத்தோழா, இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே,
நீரே, பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே,
ஏகமாய் நீர்- அர்ச்சிக்கப்படுகிறீர்.
உன்னத கர்த்தரே. ஆமேன்.


No comments:

Post a Comment

பாடி வேத போதனை - ஞானப்பாடல் : 12

பாடி வேத போதனை - ஞானப்பாடல் : 12 1. பாடி வேத போதனை கேட்டு ஜெபிக்க அன்பான கர்த்தர் இப்போ கிருபை செய்ததாலே நம்மை வான ஊணால் போஷித்ததற்...