1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே,
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி, ராஜாதி ராஜாவே,
உமது மா, மகிமைக்காக, கர்த்தா,
தோத்திரஞ் சொல்லுகிறோமே.
2. கிறிஸ்தே, இரங்கும் குமாரனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தேவாட்டுக்குட்டி,
எங்கள் மனு- கேளும்; பிதாவினது
ஆசனத்தோழா, இரங்கும்.
3. நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே,
நீரே, பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே,
ஏகமாய் நீர்- அர்ச்சிக்கப்படுகிறீர்.
உன்னத கர்த்தரே. ஆமேன்.

No comments:
Post a Comment